» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லை சீமையில் கிறித்தவம் நூல்: கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:20:44 AM (IST)

சென்னையில், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய "நெல்லை சீமையில் கிறித்தவம்" என்று நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.
சென்னை கோடம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் காவ்யா பதிப்பகம் சார்பில் 12 புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தங்களை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை சீமையில் கிறித்தவம் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்த நூலை அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்தி, சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் பவள விழா நாயகன் காவ்யா சண்முகசுந்தரம், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சங்கர்மணி, திரைப்பட உதவி இயக்னுர் ரூபன், டாப் டிவி ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காவ்யா சண்முக சுந்தரம் தலைமையில் காவ்யா பதிப்பகம் செய்து இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்சாரம் பாய்ச்சி பெண் கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தில் கணவன் வெறிச்செயல்!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:07:20 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிலம்பம் பயிற்சியாளர் கைது!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:26:26 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)

ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்தன!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:37:48 AM (IST)

பொருநை அருங்காட்சியகம்: நிதிஅமைச்சருக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் பாராட்டு
வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:06 AM (IST)

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்: டிஐஜி சரவணன் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:24:46 AM (IST)



.gif)