» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் எஸ்ஐஆர் பணியில் தேர்தல் பிரிவு ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:02:38 AM (IST)
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் எஸ்ஐர் ஆர் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தூத்துக்குடி பி&டி காலனியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சரவணன் (35). மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சண்முகபிரியா (30) என்ற மனைவியும், ரிசானா (8), சஹானா(5), ரிஷிலிங்கா (3) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணனுக்கு, நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிக பணிச் சுமையின் காரணமாகவே சரவணன் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:10:06 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:55:29 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

தூத்துக்குடி தெப்பகுளம் அருகே திடீர் பள்ளம் : கான்கிரீட் தளம் சேதம் - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:17:45 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


.gif)