» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செய்வதாக கூறி, செல்போன் எண் மூலம் ஓ.டி.பி. எண் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன் அச்சிடப்பட்ட பட்டியலை வழங்கினார்கள். அந்த பட்டியலை பூர்த்தி செய்து வாங்கும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட பட்டியலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளனர்.
அந்த செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எனப்படும் கடவுச்சொல் அனுப்பி உள்ளதாகவும், அதை சொல்லுமாறு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு மோசடி முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு யாரும் ஓ.டி.பி. எண் கேட்டால் வழங்க வேண்டாம், ஓ.டி.பி வழங்க மறுத்து விடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் சார்பிலும் இதுபோன்று எந்தவித ஓ.டி.பி.யும் வாக்காளர் செல்போன் எண்ணுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் கூட்டுறவு வார விழா: ரூ.107.71 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கல்
வியாழன் 20, நவம்பர் 2025 5:54:26 PM (IST)

தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:00:12 PM (IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 20, நவம்பர் 2025 4:52:06 PM (IST)

பார்சல்களை அனுப்ப தனி ரயில் சேவை : டிச.12-ம் தேதி முதல் தொடக்கம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:10:02 PM (IST)

தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST)

காதலிக்க மறுத்ததால் மாணவி கொலை : கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
வியாழன் 20, நவம்பர் 2025 10:52:17 AM (IST)


.gif)