» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியான அறிக்கையில், ‘எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி துணை மேலாளர், எஸ்இடிசி மேலாண் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த அக்டோபர் 14 அன்று மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும், அதே சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர கூடுமான வரை வேண்டாம் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகளில் 50% மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சுங்க சாவடிகளில் இடையூறு இன்றி செல்ல தனியான வழித்தடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதனை கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை (Enforcement Team) குழு அமைக்கப்பட்டு அக்டோபர் 16 முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது மக்கள் போக்குவரத்து தொடர்பான புகார்களை 24/7 தெரிவிக்கும் பொருட்டு தமிழகம் உள்ள 12 சரக அலுவலகங்களிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் செய்திதாள் மற்றும் செய்தி தொலைக்காட்சி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. இச்செயல்பாட்டின் மூலம் இதுவரை 357 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.4355961/- இணக்க கட்டணம் மற்றும் வரியாக பெறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு Abhi Bus, Red Bus. Make My Trip போன்ற முன் பதிவு ஆன்லைன் செயலிகள் கண்காணிக்கப்பட்டு அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து கட்டணங்களை குறைக்க அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புகாரளிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
1 போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151
2 இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 97893 69634
3 இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 93613 41926
4 இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394
5 இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் 93848 08302
6 துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் 96773 98825
7 துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011
8 துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423
9 துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 99949 47830
10 துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343
11 துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் 90257 23800
12 துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி 96981 18011
13 துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865 என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:16:40 PM (IST)

மதுரை மேயரின் ராஜினாமா தீர்மானம் ஏற்பு: 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் நிறைவு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:10:07 PM (IST)

தி.மு.க.வின் உருட்டுக்கடை அல்வா: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:54:21 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது : தேர்தல் ஆணையம்
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:23:52 PM (IST)

நூறு கோடி இந்துக்களை அவமதிக்கும் செயல்: துணை முதல்வர் உதயநிதிக்கு பாஜக கண்டனம்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)

ஆதிச்சநல்லூரில் விரைவில் சைட் மியூசியம் அமைக்கப்படும் : தொல்லியல் அதிகாரி தகவல்
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:11:42 PM (IST)
