» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பயப்படும்படி ஒன்றும் இல்லை; ராமதாஸ் ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி
திங்கள் 6, அக்டோபர் 2025 12:00:27 PM (IST)

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய சிகிச்சை நிபுணா்கள் திங்கள்கிழமை காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதையொட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார்.
பிறகு, மருத்துவமனயிலிருந்து வெளியே வந்த அன்புமணி, செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவர் 6 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிரவில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்தபிறகு, பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பாதாகவும் 6 மணி நேரத்துக்குப் பிறகு வெளியே அழைத்து வரப்படுவார் என்றும், இரண்டு நாள்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
கடந்த 2013-இல் இதே மருத்துவமனையில் ராமதாஸுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ராமதாஸ் மருத்துவமனைக்குச் சென்று இதய பரிசோதனை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
