» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தசரா திருவிழா சப்பர பவனி: மாவிளக்கு ஊர்வலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஞாயிறு 5, அக்டோபர் 2025 8:44:31 AM (IST)

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில் முன்பு பல்வேறு அம்மன் ஆலயங்களின் சப்பர பவனி நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கடந்த கடந்த செப்.23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அனைத்து சப்பர பேரணி நேற்று மாலை நடந்தது. பேரணியில் கிராம தேவதை என அழைக்கப்படும் மேலூர் பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன், உள்ளிட்ட தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன.

தொடர்ந்து 500க்கும் மேற்பட்டபெண்கள் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி சிவன் கோவில் முன்பு வந்தடைந்தது. முன்னதாக வடபாகம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் சப்பரத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் கௌதம் உதவி பொது மேலாளர் வசந்த் தலைமை மேலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலையில் அனைத்து அம்மன்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து பட்டுசாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
சப்பர பேரணி முன்பாக மேளதாளம் முழங்க ஒயிலாட்டம் கரகாட்டம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் விளையாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக வர அம்மன் ஆலயங்களின் இந்த சப்பர பேரணியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட அனைத்து சப்பரங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கன், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மண்டல தலைவர் ராஜேஷ் கனி, பொதுச் செயலாளர் சிவராமன், சப்பரபேரணி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், தலைவர் தனபாலன், செயலாளர் வன்னியராஜ், பொருளாளர் ஆதிநாத ஆழ்வார், அமைப்பாளர் சிவகுமார், துணைத்தலைவர்கள் ராகவேந்திரா வேலுசாமி, குருசாமி, காளிராஜா, துணை பொருளாளர் சரவணகுமார் மாவிளக்கு கமிட்டி நிர்வாகிகள் எஸ்பிஎஸ் கனகராஜ், பாலசேகர், கிருஷ்ணன், செல்லப்பா சங்கர் ராஜ், தங்கச் செல்வன், கோவில் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)

Om SakthiOct 6, 2025 - 01:50:25 PM | Posted IP 172.7*****