» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக நிர்வாகி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை
சனி 4, அக்டோபர் 2025 3:33:52 PM (IST)

கோவில்பட்டியில் பாஜக நிர்வாகி வீட்டிற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் ரோடி, இவர் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தார். தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. இவரது மனைவி செளமியா, பாஜக வடக்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் தினேஷ் ரோடி இ.மெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பியுள்ளார். அவரது வீட்டு பகுதியில் மூன்று ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்குள் வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது
இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட வெடிகுண்டு கண்டறிதல், அகற்றல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தினேஷ் ரோடி வீடு, அருகில் உள்ள கார்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
