» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமித்ஷா நாளை நெல்லை வருகை: ஏற்பாடுகள் தீவிரம் - 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:32:15 PM (IST)



மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை நெல்லை வருகை தருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அரியணை ஏற அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத் துள்ள பாரதீய ஜனதா கட்சி இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டு உள்ளது.

குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறவும், அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி 200 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வியூகம் வகுத்து வருகிறார். இதற்காக அ.தி.மு.க.- பாரதீய ஜனதா கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கட்சியை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.அதன்ஒரு பகுதியாகவும், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பாரதீய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழ்நாடு முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது. இதன் முதல் மாநாடு நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சிறப்பு ரையாற்றுகிறார்.

இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் ரெயில்வே ேமம்பாலம் அருகே பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டமன்ற ெதாகுதிகளை சேர்ந்த 8,595 பூத் கமிட்டி களை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் பாரதீய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னாள் மாநில தலை வர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய தலை வர்கள் பங்கேற்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்பதற் காக அமித்ஷா கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கி ருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்கிறார்.

மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது, மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழக மக்க ளுக்கு அளித்த எண்ணற்ற மக்கள நலத்திட்டங்களையும், பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி செய்ததை ஒவ்வொருவரும் தங்களுடைய பூத்தில் உள்ள பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்து விரிவாக பேச உள்ளார்.

மேலும், ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீத வாக்கு களை பெறுவதற்காக தீவிர மாக பணியாற்றுவது உள்ளிட்ட ஆலோசனை களை வழங்கியும், வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. தொண்டர்கள் எதிர்கொள்வதற்கான தெளிவான பாதையை காட்டி பேசுவார் என நிர்வாகிகள் எதிர்பார்ப்பு டன் உள்ளனர். அதோடு, சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்துவார் என கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமித்ஷாவை வரவேற்று நெல்லை மாநகரில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர்.

இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நடைபெற்று வரும் ஏற்பாடுகளை நயினார் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநாட்டுக்கு வரும் நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்கள், அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, இருக்கைகள் உள்ளிட்ட வசதி, மாநாடு முடிந்ததும் நிர்வாகிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு உள்ளிட்டவை குறித்து மாவட்ட தலைவருடன் கலந்து ஆலோசித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட தலைவர்கள் முத்துபலவேசம், சித்ராங்கதன், ஆனந்தன் அய்யாச்சாமி, மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் தீபா, மாவட்ட துணைத்தலைவர் துரைபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory