» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் முன் பாய்ந்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 7:54:04 AM (IST)
விருதுநகர் அருகே தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பட்டம்புதூர் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று சிதறிக் கிடந்த உடல் பாகங்களைக் கைப்பற்றி, மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் பட்டம்புதூர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தர்மரின் மனைவி ராஜவள்ளி (60), அவரது மகள்கள் மாரியம்மாள் (30), முத்துப்பேச்சி (25) என்பது தெரியவந்தது.
அண்மைக்காலமாக சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியிருந்த ராஜவள்ளி, குடும்ப வறுமையைக் கண்டு வருந்தி வந்ததாகவும், வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான தனது இரு மகள்களுக்கும் தன்னால் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியிலும், இரு மகள்களுடன் ராஜவள்ளி நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரம் - திருச்சி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. தூத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
