» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்: 2பேர் கைது - 3 பெண்கள் மீட்பு!!
புதன் 20, ஆகஸ்ட் 2025 7:55:47 AM (IST)

கோவில்பட்டியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டையபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற மசாஜ் சென்டர் செயல் பட்டு வருகிறது. இதில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தனமாரி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடந்தது உறுதியானது. இதையெடுத்து அங்கிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (59), மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்த பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை மீட்டு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
