» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் தீ விபத்து

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 6:18:12 PM (IST)



தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் சிலுக்கன்பட்டி சந்திப்பில் தேவா அன் கோ மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கான பேர் வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ஆலையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மற்றும் சிப்காட் தீயனைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைத்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில் ஆலையின் பின் புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த கழிவு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பரவி தீப்பிடித்து  எரிந்தது என்று தெரிவித்தனர். தீயனைப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory