» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவினருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை என்று அர்த்தமல்ல: ‍ கனிமொழி கருத்து

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:26:37 PM (IST)

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதால் பாஜகவினருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை என்று அர்த்தமல்ல என திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

செப். 9 நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, "இது ஒரு சித்தாந்த ரீதியான போராட்டம். ஹிந்துத்துவா, ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வரும் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக முன்வந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பாஜகவினர் பிரிவினைவாத அரசியலை செய்கிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம்.

எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ள வேட்பாளர் அரசியலமைப்பை மதிக்கும் ஒருவர். நாட்டு மக்களை மதிக்கும் ஒருவர். மக்கள் நலன் விரும்புவோர், ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் (பாஜக) தமிழ்நாட்டிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்துகிறீர்கள் என்பதற்காக நீங்கள் தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல.

தமிழ்நாடு, தமிழ் மொழி அல்லது மாநிலத்தின் மதிப்புகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. ஏனெனில் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதியைக்கூட கொடுக்கவில்லை. தமிழ்மொழியை அவர்கள் கண்டுகொள்ளவில்லை, ஹிந்தியை திணிக்கிறார்கள். எங்களுடைய வரலாறை அவர்கள் திருத்தப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மீது அவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை" என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory