» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை : நெல்லையில் பரிதாபம்
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 8:58:23 PM (IST)
நெல்லையில் ரயில்முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சிவசங்கர் (40). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, சிவசங்கர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மதியம் அவர் தனது வீட்டின் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார்.
அப்போது அந்த வழியாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவசங்கர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்த பிரச்சினையால் சிவசங்கர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
