» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை: நிலுவைத் தொகை செலுத்த அழைப்பு

சனி 16, ஆகஸ்ட் 2025 12:45:43 PM (IST)

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தாரர்களுக்கு வட்டித்தள்ளுபடி சலுகையை  திருநெல்வேலி வீட்டு வசதி செயற்பொறியாளர் இ.ஜான் ஜோசப் ராஜ்  அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருநெல்வேலி வீட்டு பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுக தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழக அரசாணை நிலை) எண்.116, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள்.04.08.2025 வட்டித்தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்காணும் ஆணையின்படி மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியினை முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் வட்டித்தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகை எதிர்வரும் 31.03.2026-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆகவே திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட பாளை பகுதி | முதல் V. குலவணிகர்புரம் TNUDP .கீழநத்தம், நாரணம்மாள்புரம் பகுதி I,II, வி.எம். சத்திரம், வள்ளியூர், சுத்தமல்லி, ஆகிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களில் 31.03.2015-க்குள் தவணைக்காலம் முடிவுற்றும், இந்நாள்வரை நிலுவைத்தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, 31.03.2026-இதற்குள் நிலுவைத்தொகையை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏற்கனவே முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களும் திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவினை தொடர்பு கொண்டு உடனடியாக கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனவும்  திருநெல்வேலி வீட்டு வசதி செயற்பொறியாளர் இ.ஜான் ஜோசப் ராஜ்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory