» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை ரயில் நிலைய யார்டு பராமரிப்பு பணி: ஆகஸ்ட் 20ம் தேதி 6 ரயில்கள் ரத்து!

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:11:20 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலைய யார்டு பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகிற ஆகஸ்ட் 20ந் தேதி புதன்கிழமை  6 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லையில் இருந்து காலை 10.20 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56729 முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக வாஞ்சி மணியாச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56732 திருச்செந்தூர் நெல்லை இடையே பகுதியாக  ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16731 மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16732 ஆகிய 2 ரயில்களும் ஆகஸ்ட் 20ந் தேதி கோவில்பட்டி திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அன்று அந்த ரயில் வண்டி எண் 16732 திருச்செந்தூரில் புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து மதியம் 2:33 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும்.

மேலும் செங்கோட்டை - நெல்லை ரயில் வண்டி எண் 56742 மற்றும் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் வண்டி எண் 56743 ஆகிய 2 ரயில்களும் சேரன்மகாதேவி நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் வண்டி எண் 56743 சேரன்மகாதேவியில் இருந்து மதியம் 2:02 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory