» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது : நெல்லையில் பரபரப்பு

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:41:35 AM (IST)

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வந்தவர் சசிகுமார் (45). 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை அருகே ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 9-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவிக்கவில்லையாம். உடனே மாணவி, சக மாணவிகளின் உதவியுடன் ஒன் ஸ்டாப் சென்டர் குழந்தைகள் காப்பகம் எண்ணை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார்.

உடனடியாக குழந்தைகள் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். சசிகுமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் போக்சோ சட்டத்தில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory