» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நயினார்குளம் பிரிவு கால்வாய் தூர்வாரும் பணி : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
புதன் 25, ஜூன் 2025 4:53:15 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் பகுதியில் 2 மீட்டர் ஆழத்திற்கு குப்பை மற்றும் கட்டட கழிவுகள் அகற்றும் பணி 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டர் நீர்வளத்துறையின் மூலமும், 200 மீட்டர் எக்ஸ் நோரா தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்து அடுத்த வாரம் இறுதிக்குள் நிறைவடையும். அகற்றப்பட்ட கழிவுகள் அனைத்தும் 4 கிலோ மீட்டருக்கு வெளியில் சென்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், தாமிரபரணி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி!!
புதன் 25, ஜூன் 2025 5:22:49 PM (IST)

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 5:02:23 PM (IST)

சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி
புதன் 25, ஜூன் 2025 4:09:37 PM (IST)

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
புதன் 25, ஜூன் 2025 12:47:01 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா 30ம் தேதி தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்!
புதன் 25, ஜூன் 2025 12:06:46 PM (IST)

ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 25, ஜூன் 2025 12:01:34 PM (IST)
