» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:24:43 PM (IST)

திருச்செந்தூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த அமலன் மகன் பிரபு (29/14) என்பவரை கடந்த 22.05.2014 அன்று அமலிநகர் மையவாடியில் வைத்து கொலை செய்து புதைத்த வழக்கில் அமலிநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தயானந்தன் மகன் டெரன்ஸ் (30/25), மைக்கேல் மகன் பிரக்சின் ஷியாஷ்டன் (32/25) மற்றும் ஆல்பர்ட் மகன் இருதய அந்தோணி சிரியல் (32/25) ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் இன்று (13.06.2025) குற்றவாளிகளான டெரன்ஸ், ஷியாஷ்டன், இருதய அந்தோணி சிரியல் ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் பரணி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்
சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)

மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது: மத்திய அரசை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!
சனி 14, ஜூன் 2025 4:54:52 PM (IST)

பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சனி 14, ஜூன் 2025 4:04:48 PM (IST)

எழுத்தறிவு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 14, ஜூன் 2025 3:24:51 PM (IST)
