» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு
வெள்ளி 13, ஜூன் 2025 5:34:11 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் இன்று (12.06.2025) ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு எல்லாருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றுள்ளதா என்றும், TABCEDCO மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதியில் தங்கி பயின்றவர்கள் உயர்க்கல்வியில் சேருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிலை தொடர்பாக துறை அலுவலர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் இ,ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக 5 பயனாளிகளுக்கு இலவச டுPபு தேய்ப்பு பெட்டிகளும், 5 நபர்களுக்கு சீர்மரபினர் அடையாள அட்டைகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வழங்கினார்கள்.
தொடர்ந்து, TABCEDCO மூலம் இசக்கி ராஜா என்பவருக்கு ரூ.9.5 இலட்சம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வண்ணார்பேட்டை பகுதியில் கண் ஆப்டிக்கல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கடன் உதவித்தொகையினை முறையாக செலுத்தும் பட்சத்தில் கடையை மேம்படுத்துவதற்கு TABCEDCO மூலம் கூடுதல் கடனுதவி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நல்ல முறையில் கடனுதவியை பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதைப்போன்று TABCEDCO மூலம் ரூ.9.5 இலட்சம் கடனுதவி பெற்று தச்சநல்லூர் பகுதியில் மாரியப்பன் பேக்கிரி நிறுவனம் நடத்தி வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மேலப்பாளையம் அரசு பல் தொழில் நுட்ப கல்லூரி மாணவர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள உணவு பட்டியலின்படி உணவு வழங்கப்படுகிறதா என்றும், உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கேட்டறிந்தார்.
வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்று விடுதி காப்பாளரிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் திலிப்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்
சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)

மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது: மத்திய அரசை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!
சனி 14, ஜூன் 2025 4:54:52 PM (IST)

பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சனி 14, ஜூன் 2025 4:04:48 PM (IST)

எழுத்தறிவு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 14, ஜூன் 2025 3:24:51 PM (IST)
