» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொது வெளியில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டாஸ்: ஆளுநர் ஒப்புதல்!

வெள்ளி 13, ஜூன் 2025 4:48:02 PM (IST)

மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 

பொது இடங்களில் உயிரி மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்)  கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஏப்ரல் 29ம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory