» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வள்ளியூரில் 1 கிலோ பறிமுதல் : வாலிபர் கைது!

வெள்ளி 13, ஜூன் 2025 10:52:23 AM (IST)

வள்ளியூரில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வள்ளியூர் முத்தாரம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை சோதனை செய்தனர். அப்போது அவர் 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் வள்ளியூரை சேர்ந்த ராஜா (41) என்று தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory