» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:49:57 PM (IST)
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
அதன்படி, அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் விசாரிப்பார்கள் என்றும் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் லட்சுமி நாராயணன், நிர்மல் குமார், சுவாமிநாதன் ஆகியோரும் மே 28, 29 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சத்திய நாராயணா பிரசாத், செந்தில் குமார் ராமமூர்த்தி, திலகவதி ஆகியோரும் விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பாலாஜி, ஜோதிராமன், சக்திவேல், ராமகிருஷ்ணன், வேல் முருகன், பூர்ணிமா, ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஷமீன் அகமதி, ஆனந்த் வெங்கடேஷ், தண்டபாணி ஆகியோர் விடுமுறைக் கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியாக உள்ளதா? ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் ஆய்வு!
செவ்வாய் 6, மே 2025 5:02:01 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய் 6, மே 2025 12:06:17 PM (IST)

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)
