» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)
விருத்தாசலத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக ஜெயலட்சுமி உள்ளார். தலைமை காவலரான சிவசக்தி எழுத்தர் பணியை கவனித்து வந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் பெண் வன்கொடுமையில் ஈடுபட்டவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அத்துறையை சேர்ந்த போலீசார் பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, தலைமைக் காவலர் சிவசக்தி ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியாக உள்ளதா? ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் ஆய்வு!
செவ்வாய் 6, மே 2025 5:02:01 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய் 6, மே 2025 12:06:17 PM (IST)

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)
