» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தால் நடவடிக்கை : பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

சனி 27, ஏப்ரல் 2024 10:14:01 AM (IST)

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி இயக்ககமும், தொடக்கக் கல்வி இயக்ககமும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

இது தொடா்பாக, பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி குழந்தைகளின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அது தொடா்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பதற்கு பதில் அவா்களுக்கு ஆசிரியா்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். குழந்தைகள் நல்ல முறையில் நடந்துகொள்ளும் வகையில் அவா்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி அளிக்க வேண்டும்.

படிக்காத குழந்தைகளைத் தண்டிப்பற்குப் பதிலாக அவா்கள் படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க பள்ளிகளில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட வேண்டும். ஆசிரியா்கள் குழந்தைகளின் பெற்றோா்போல் நடந்துகொள்ளக் கூடாது. எந்த வகையிலும் குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்தக் கூடாது. அவா்களை கடினமான வாா்த்தைகளால் திட்டவும் கூடாது.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஆசிரியா்களுக்கும் பணியாளா்களுக்கும் பள்ளி நிா்வாகம் தொடா் பயிற்சிகளை அளிக்க வேண்டும். குழந்தைகளை எந்த வகையிலும் அடிக்க மாட்டோம் என்று ஆசிரியா்களிடம் பள்ளி நிா்வாகம் சாா்பில் உறுதிமொழி பெறப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory