» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

வியாழன் 4, ஏப்ரல் 2024 9:53:25 AM (IST)

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியே இயக்கப்படும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் மாா்ச் மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயில்களின் சேவை மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) வருகிற ஏப்ரல் 7, 14, 21, 28, மே 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கத்தில், மேட்டுப்பாளைம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஏப். 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory