» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரை மறித்த பொதுமக்கள்: நெல்லையில் பரபரப்பு
புதன் 3, ஏப்ரல் 2024 10:02:21 AM (IST)
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் பகுதியில் ஊர் பொதுமக்கள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை வழிமறித்து முற்றுகையிட்டனர்.
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கொடுக்காதது, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பி, வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.