» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வலைதளத்தில் வைரல்: வாலிபர் கைது!

திங்கள் 11, மார்ச் 2024 8:01:51 AM (IST)

சாத்தான்குளம் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு வாலிபர் மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த ஏசுவடியான் மகன் அருள்ஜாண்சன் (35). இவர் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று அங்கிருந்த பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் அப்பகுதியில் உள்ள மணல் குவாரி தொடர்பாக மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். அப்போது, ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். 

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதற்கு அவர் படம், வீடியோ எடுத்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறியவாறு வெளியே செல்கிறார். இந்த வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலானது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அளித்த. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் அருள்ஜாண்சனை இன்ஸ்பெக்டர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory