» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்
சனி 16, ஏப்ரல் 2022 10:09:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் 2ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தது.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா மிக எளிமையாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது.

முன்னதாக காலை 7 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் - முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர். தொடர்ந்து காலை 10:45 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை தேரோட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளும், ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம் இசை ஒலிக்க கோலாகலமாக நடைபெற்றது. வான வேடிக்கை தொண்டர்களின் சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடந்தது. தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது.

தேரோட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில் இணை ஆணையர் அன்புமணி, ஆய்வாளர் ருக்மணி செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொழிலதிபர்கள் ஏ.வி.எம்.வி. மணி ஏ.வி.எம்.முத்துராஜ் டி.ஏ.தெய்வ நாயகம் இ.பி பழனியப்பன் கே.எஸ்.ஜி.கண்ணன், பி.எஸ்.கே. மாரியப்பன், கே.ஏ.பி. சீனிவாசன், தி.மு.க மாநகரசெயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், கிழக்கு மண்டல மாநகராட்சி தலைவர் கலைச் செல்வி லிங்கராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி மாநகர கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார், முருகன் யாதவ் எஸ்.கே. எஸ்.சி.என்.தர்மராஜ் நாடார் ராஜ் தியேட்டர் பாஸ்கர் மற்றும் தேரோட்ட விழா குழுவினர் முன்னாள் அறங்காவலர் தலைவர் ஏ கோட்டு ராஜா உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
RajanApr 16, 2022 - 12:24:16 PM | Posted IP 173.2*****
மத்திய அமைச்சர் திரு முருகன் என்று வாசிக்கவும்
RajanSep 20, 1650 - 04:30:00 AM | Posted IP 108.1*****
பதிவு 10 மணிக்கு போட்டு விட்டு தேர் நிலைக்கு வந்து விட்டது என்று போட்டுள்ளீர்கள் . மேலும் மத்திய அமைச்சர் முருகப்பெருமானின் பெயர் இல்லை
மேலும் தொடரும் செய்திகள்

லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 5, ஜூன் 2025 5:34:17 PM (IST)

மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 5, ஜூன் 2025 5:26:54 PM (IST)

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 5, ஜூன் 2025 4:56:29 PM (IST)

டி.சி.டபிள்யூ சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா : இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு!
வியாழன் 5, ஜூன் 2025 4:27:19 PM (IST)

கஞ்சா, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 5, ஜூன் 2025 4:21:55 PM (IST)

அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:34:46 PM (IST)

தமிழன்Apr 16, 2022 - 01:42:44 PM | Posted IP 162.1*****