» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்

சனி 16, ஏப்ரல் 2022 10:09:31 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் 2ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தது.
 
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா மிக எளிமையாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. 


முன்னதாக காலை 7 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் - முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர். தொடர்ந்து காலை 10:45 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை தேரோட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளும், ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம் இசை ஒலிக்க கோலாகலமாக நடைபெற்றது. வான வேடிக்கை தொண்டர்களின் சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடந்தது. தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது. 




தேரோட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில் இணை ஆணையர் அன்புமணி,  ஆய்வாளர் ருக்மணி செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொழிலதிபர்கள் ஏ.வி.எம்.வி. மணி ஏ.வி.எம்.முத்துராஜ் டி.ஏ.தெய்வ நாயகம் இ.பி பழனியப்பன் கே.எஸ்.ஜி.கண்ணன், பி.எஸ்.கே. மாரியப்பன், கே.ஏ.பி. சீனிவாசன், தி.மு.க மாநகரசெயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், கிழக்கு மண்டல மாநகராட்சி தலைவர் கலைச் செல்வி லிங்கராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி மாநகர கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார், முருகன் யாதவ் எஸ்.கே. எஸ்.சி.என்.தர்மராஜ் நாடார் ராஜ் தியேட்டர் பாஸ்கர் மற்றும் தேரோட்ட விழா குழுவினர் முன்னாள் அறங்காவலர் தலைவர் ஏ கோட்டு ராஜா உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Apr 16, 2022 - 01:42:44 PM | Posted IP 162.1*****

இரண்டு மந்திரிகளும் தேர் இழுப்பது போன்ற படத்தை காணவில்லையே!

RajanApr 16, 2022 - 12:24:16 PM | Posted IP 173.2*****

மத்திய அமைச்சர் திரு முருகன் என்று வாசிக்கவும்

RajanSep 20, 1650 - 04:30:00 AM | Posted IP 108.1*****

பதிவு 10 மணிக்கு போட்டு விட்டு தேர் நிலைக்கு வந்து விட்டது என்று போட்டுள்ளீர்கள் . மேலும் மத்திய அமைச்சர் முருகப்பெருமானின் பெயர் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory