» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெங்களூரு உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி, கர்நாடக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
வியாழன் 5, ஜூன் 2025 11:46:53 AM (IST)
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பெங்களூரு அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்.சி.பி. அணி நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியம்: அண்ணாமலை நெகிழ்ச்சி!
சனி 7, ஜூன் 2025 12:25:18 PM (IST)

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!
சனி 7, ஜூன் 2025 12:11:47 PM (IST)

மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு வெண் பன்றிகள் பயன்படுத்த அனுமதி!
சனி 7, ஜூன் 2025 11:56:48 AM (IST)

சமூக வலைதளங்களில் போலீஸ் சீருடையுடன் புகைப்படம் வெளியிட கூடாது : டிஜிபி உத்தரவு!
சனி 7, ஜூன் 2025 10:58:53 AM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
சனி 7, ஜூன் 2025 10:35:25 AM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு
சனி 7, ஜூன் 2025 9:05:57 AM (IST)
