» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

ScooterAttackDMK.jpg

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, ஸ்கூட்டரில் சென்ற இளைஞரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தஞ்சை காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் திமுகவினர் இன்று சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் ஒருவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

சாலையில் தனியாக வந்த இளைஞரை திமுகவினர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory