» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:05:20 AM (IST)

கையில் அரிவாளுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' ஆக பதிவிட்ட வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், தற்போது குடும்பத்துடன் ஆறுமுகநேரி பூவரசூரில் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா (26). இவர் தனது கையில் பெரிய அரிவாளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி, நாக்கை துருத்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து எழுந்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ரென்னீஸ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சூர்யாவை அதிரடியாகக் கைது செய்தார். பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 9 வழக்குகளும், பாளையங்கோட்டை மற்றும் நெல்லை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தலைவன் வடலிAug 3, 2026 - 02:17:07 PM | Posted IP 162.1*****

பிரச்சினைக்குரிய இடம் தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory