» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:14:59 AM (IST)
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (60). ஓட்டுநரான இவர், தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். புதூர் பாண்டியாபுரம் அருகே, நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவர் பிரிக்கப்பட்டு வழி அமைக்கப்பட்டிருந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்காகச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, குறுக்குச்சாலையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக மந்திரமூர்த்தியின் பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மந்திரமூர்த்தி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த புதியம்புத்தூர் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கே. வேலாயுதபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜஸ்டின் டேனியல் (48) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)



makkalAug 3, 2026 - 01:00:19 PM | Posted IP 104.2*****