» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்: செவிலியர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
புதன் 29, ஜூலை 2026 11:47:56 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து 22 வயது பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ். இவரது மகள் ஆஷிகா (22). இவர் வெட்டுவெந்நியில் இயங்கி வரும் ஒரு தனியார் கண் மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களாகச் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பணி நேரத்தில் மருத்துவமனையின் மாடியில் இருந்து ஆஷிகா திடீரெனக் கீழே விழுந்து பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.உயிரிழந்த ஆஷிகாவிற்கு அண்மையில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி 4-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், இதுகுறித்து முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனப் போலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)


