» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பணம் வைத்து சூதாட்டம்: 6பேர் கும்பல் சிக்கியது!

திங்கள் 29, ஜூன் 2026 5:20:24 PM (IST)

ஆறுமுகநேரி அருகே பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து  31,240 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை ரோடு பகுதி கோவில் அருகில் சிலர் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்குப் பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குரும்பூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (39), மாடசாமி (42), ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (62), ரெக்ஸ்டன் (31), அழகர் (44) மற்றும் புறா முருகன் (68) ஆகிய 6 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள் மற்றும் 31,240 ரூபாய் ரொக்கப் பணத்தை உதவி ஆய்வாளர் இருதயராஜ் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory