» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:48:24 AM (IST)
சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ஓடும் அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பேருந்து மூலைக்கரைப்பட்டி அருகே வந்த போது, அதில் பயணம் செய்த 21 வயது இளம் பெண் ஒருவருக்குப் பேருந்து நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக நடத்துநரை எச்சரித்தார். தொடர்ந்து, பேருந்து மூலைக்கரைப்பட்டியில் வந்து நின்ற போது, அங்கேயே இறங்கிய அப்பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இச்சம்பவம் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்த குமாரசாமி (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையைச் செப்பனிட விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
திங்கள் 29, ஜூன் 2026 9:23:31 PM (IST)

பணம் வைத்து சூதாட்டம்: 6பேர் கும்பல் சிக்கியது!
திங்கள் 29, ஜூன் 2026 5:20:24 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)



மொபைலில்Jun 29, 2026 - 12:33:55 PM | Posted IP 104.2*****