» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!

திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்றுக்கொண்ட  மேரி பிரின்சி லதா, இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளை முறைப்படி தொடங்கினார்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த மேயருக்கு, மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், மேயருக்கான இருக்கையில் அமர்ந்து தனது முதல் நாள் கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.

பணிகளைத் தொடங்கிய கையோடு, மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், சாலை வசதிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவர் முதற்கட்ட ஆலோசனை நடத்தினார். நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory