» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழகத்திற்குத் தனி ரயில்வே அமைச்சகம் தேவை : குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை
வெள்ளி 1, மே 2026 12:06:58 PM (IST)
கேரள மாநிலத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் ரயில்வே துறைக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கி, அமைச்சரை நியமிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்டை மாநிலமான கேரளா, ரயில்வே வளர்ச்சியில் தமிழகத்தை விட 20 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்றுள்ளது. அங்கு மாநில ரயில்வே அமைச்சர் செயல்படுவதால், மத்திய அரசிடம் போராடிப் புதிய திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் பெற்று வருகின்றனர். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் அங்கு தொடங்கிவிட்டன. ஆனால், தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சுதந்திரம் அடைந்தது முதல் சுமார் 3,000 கி.மீ. புதிய இருப்புப் பாதைக்கான ஆய்வுகள் முடிந்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மீட்டர் கேஜ் பாதைகள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அகலப் பாதைகளாக மாற்றப்பட்டும், அங்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் பல திட்டங்கள் முடங்கியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சரே குற்றம் சாட்டியுள்ளார்.
தனி அமைச்சகம் மற்றும் மாவட்ட அதிகாரி
தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய அரசு, ரயில்வே வளர்ச்சிக்கு எனத் தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் புதிய ரயில்களை இயக்குதல், இருவழிப் பாதை மாற்றங்களை விரைவுபடுத்துதல் போன்ற பணிகளைத் துரிதப்படுத்த முடியும்.
மேலும், மாவட்ட அளவில் ரயில்வே பணிகளைக் கவனிக்க 'மாவட்ட ரயில்வே போக்குவரத்து மேம்பாட்டு அலுவலர்' (District Railway Transport Development Officer) என்ற பதவியை உருவாக்க வேண்டும். ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளை இந்தப் பதவியில் நியமிப்பதன் மூலம், பொதுமக்களின் கோரிக்கைகளைத் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் முறையாகக் கொண்டு சென்று தீர்வுகாண முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் ரயில்வே துறையில் முன்னேற மாநில அமைச்சரவையில் இதற்கெனத் தனிப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)


