» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது: பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்!
புதன் 29, ஏப்ரல் 2026 8:34:26 AM (IST)
தூத்துக்குடி அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளிக் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் ஒன்றரை யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், வர்த்தகரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்துவதாகக் கிராம நிர்வாக அலுவலர் (மாரிசங்கருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் எவ்வித அனுமதியுமின்றி மண் அள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பொக்லைன் இயந்திர ஆப்பரேட்டர் ராமசாமி (33), லாரி ஓட்டுநர் வெள்ளைச்சாமி (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு பொக்லைன் இயந்திரம், ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒன்றரை யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மதுக்கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
புதன் 29, ஏப்ரல் 2026 3:54:51 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)



ஊர் மக்கள்Apr 29, 2026 - 11:12:26 AM | Posted IP 162.1*****