» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலையில் கிடந்த மணி பர்ஸை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவர்கள்: பாராட்டுக்கள் குவிகிறது!

திங்கள் 13, ஏப்ரல் 2026 10:22:07 AM (IST)



ஆத்தூரில் சாலையில் சிதறி கிடந்த பணத்துடன் கூடிய மணி பர்ஸை எடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையிடம் வழங்கிய சிறுவர்களின் நேர்மை பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் சோமநாதர் கோயில் தேர் அருகே, நேற்று சுமார் ரூ. 3,600 ரொக்கப் பணம் இருந்த கருப்பு நிற மணி பர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற முகமது இர்பான் (14), அமர்ஜெர்ரி (12), பிரஜித் (14) மற்றும் திலீப்குமார் (14) ஆகிய நான்கு சிறுவர்கள் அந்தப் பையை எடுத்துள்ளனர்.

பணத்தைக் கண்டெடுத்த சிறுவர்கள், சற்றும் தாமதிக்காமல் அதனை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பிரபாகரனிடம் அந்தப் பணப் பையை ஒப்படைத்தனர். சிறுவர்களின் இந்த உயரிய பண்பையும், நேர்மையையும் கண்டு வியந்த ஆய்வாளர், அவர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தற்காலச் சூழலில் சிறுவர்களின் இந்த நேர்மையான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்தச் சிறுவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


மக்கள் கருத்து

சங்கரன்Apr 13, 2026 - 11:47:52 AM | Posted IP 104.2*****

நல்ல குழந்தைகள். வாழ்க வளமுடன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory