» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனைவியுடன் தகராறு : சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:56:27 AM (IST)

நாசரேத் அருகே மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்துள்ள அகப்பை குளம் கிராமம், 12-வது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெயக்குமார் (59). சமோசா வியாபாரியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், ஜெயக்குமார் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

ஜெயக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை அவர் மதுவிற்கே செலவழித்து வந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயக்குமார், நேற்று தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் காவல் நிலையப் போலீசார், ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

தமிழன்Apr 4, 2026 - 09:10:06 AM | Posted IP 104.2*****

காரணம் "மது அருந்தும் பழக்கம்" வாழ்க டாஸ்மாக், வாழ்க திராவிடம்.

எனக்குApr 3, 2026 - 01:37:44 PM | Posted IP 172.7*****

சமோசா ரொம்ப பிடிக்கும் 😭

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory