» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)
தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் மற்றும் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளன.
தேர்தல் விடுமுறை நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவும் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய சோதனையில் அந்த வீட்டில் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 263 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், அடுத்த அறையில் தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூடை ரேஷன் அரிசி (மொத்தம் 1,000 கிலோ) பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த வீடு சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அவர் நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததும் தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 263 மதுபான பாட்டில்கள் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட 20 மூடை ரேஷன் அரிசி முறைப்படி உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மது மற்றும் ரேஷன் அரிசி ஒரே இடத்தில் பிடிபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)


கந்தன்Mar 29, 2026 - 05:08:26 PM | Posted IP 162.1*****