» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
என்டிபிஎல் சாம்பல் கழிவுகளால் கடல் வளம் பாதிப்பு : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 3:40:27 PM (IST)

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் கடல் வளம் அழிவதைத் தடுக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், 46-வது வார்டு வட்ட செயலாளருமான பி.ஜே. புல்டன் ஜெசின் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: தூத்துக்குடியில் அமைந்துள்ள என்டிபிஎல் அனல் மின் நிலையம், என்.எல்.சி (என்எல்சி) மற்றும் டான்ஜெட்கோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 1000 மெகாவாட் திறன் கொண்டதாக 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் நேரடியாகக் கடலில் கலக்கப்படுவதால், கடல்வாழ் உயிரினங்களும் மீன்களும் செத்து மிதக்கின்றன. கடற்கரையோரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரம் வரை சாம்பல் கழிவுகள் மிதக்கின்றன. கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவ சமுதாயம் இந்த சாம்பல் கழிவுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சம்பாதித்த மீனவர்கள், தற்போது ரூ.500 சம்பாதிப்பதே பெரும் கடினமாக உள்ளது என மனுதாரர் வேதனை தெரிவித்துள்ளார். கடல் வளம் மற்றும் மீனவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு கடலில் கலப்பதைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)


SakthiFeb 10, 2026 - 03:52:17 PM | Posted IP 162.1*****