» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் எதிரொலியாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 13 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இரு தரப்பினராக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற போலீசார் மேற்கொண்டு பிரச்சனைகள் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷ்டி முதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு தரப்பை சேர்ந்த 13 மாணவர்களை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இன்று மாணவர்களுக்கு பரிச்சை என்பதால் அறிவுரை வழங்கி அதிகாரிகள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
