» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமர் மோடிக்கு பேனர் வைத்த அதிமுக பிரமுகர் : தூத்துக்குடியில் பரபரப்பு!!

திங்கள் 15, செப்டம்பர் 2025 11:02:04 AM (IST)



தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வழக்கறிஞர் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் நகரின் பல பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் தமிழகத்திற்கு ஒதுக்கிய நலத்திட்டங்கள், அக்னிபாத், மேக் இன் இந்தியா, ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வஉசி துறைமுக மேம்பாட்டு பணிகள், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயில் சேவை, குமரி - அந்தியோத்யா இரயில் சேவை போன்ற திட்டங்களை குறிப்பிட்டு பிரதமருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் வழக்கமாக திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டுவது, பேனர்கள் வைப்பது வழக்கம். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செங்குட்டுவன், பாஜகவினரையே மிஞ்சும் வகையில் தூத்துக்குடி முழுவதும் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு டிஜிட்டல் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. 


மக்கள் கருத்து

iLANGOSep 15, 2025 - 01:31:51 PM | Posted IP 162.1*****

இந்த செல்லாக்காசு செங்குட்டுவனுக்கு எவனாவது வாய்தா வாய்ப்பானது கொடுங்கள். கேஸுதான் இல்ல. இப்படியாவது பிழைக்கட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory