» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு? : கன்னியாகுமரி அருகே பரபரப்பு
செவ்வாய் 29, ஜூலை 2025 3:58:54 PM (IST)
கன்னியாகுமரி அருகே காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் (80), இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை காவலர்கள் இழுத்து வரும் போது சூசைமரியாள் எனது பேரனை விடுங்கள் எதற்காக இழுத்து செல்கிறீர்கள் என்று கேட்ட போது வயதான மூதாட்டி என்றும் பாராமல் 4 காவலர்களும் அவரை பிடித்து கீழே தள்ளி போட்டு தரையில் இழுத்து காலால் உதைத்துள்ளனர்.
இதனால் சூசைமரியாள் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவரது மருமகள் சந்திரகலா 108 ஆம்புலன்ஸை அழைத்து குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் மூதட்டி சூசைமரியாள் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆகவே மூதாட்டியை கொடுரமான முறையில் தாக்கி கொலை செய்த நான்கு காவலர்களையும் கைது செய்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)


.gif)