» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: கண்களில் கருப்புத் துணி கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
வெள்ளி 2, மே 2025 3:24:56 PM (IST)

வெம்பூர் சிப்காட் பணியை அரசு நிறுத்த வலியுறுத்தி எட்டையபுரத்தில் விவசாயிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி ஈடுபட்டு வருகிறது.
இதனை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அழிக்கும் இத்திட்டத்தை கைவிடாமலும், விவசாயிகளை உணர்வுகளை மதிக்காமலும் விவசாய நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு ஏராளமான விவசாயிகள் தங்களது கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு சிப்காட்-க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் தமிழக அரசைக் கண்டித்தும், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் உடனடியாக சிப்காட் அமைப்பதற்கு அரசு மேற்கொள்ளும் பணியை நிறுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் அதிகளவிலான விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)

KARTHIK KANNANமே 2, 2025 - 08:49:45 PM | Posted IP 172.7*****