» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக வெற்றிக் கழகத்தினர் திடீர் சாலை மறியல் : தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 1, மே 2025 10:09:53 AM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து அக்கட்சியின் பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் த.வெ.கவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த மாநகராட்சி அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "காவல்துறை அனுமதியுடன் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டதாகவும், தவெக வளர்ச்சியை பொறுக்காமல் ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் நீர் மோர் பந்தலை அகற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)

ADA NAAN THAAN DAமே 1, 2025 - 05:15:11 PM | Posted IP 172.7*****