» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

கோதையாறு இடதுகரை கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணி அனை திறப்பிற்கு முன்பாக நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை அணையின் மூலம் தண்ணீர் வசதி பெறும் கோதையாறு இடதுகரை கால்வாயில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நெடுகை நீளம் 9,800 மீட்டரில் 35 மீட்டர் மண்சரிவு ஏற்பட்டது. அது தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
மேற்படி தளத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணியாக ரூ.32 இலட்சத்தில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அணை திறப்பதற்கு முன்பாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியினை செருப்பாலூர் உதவி செயற்பொறியாளர் மா.மூர்த்தி ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
