» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

கோதையாறு இடதுகரை கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணி அனை திறப்பிற்கு முன்பாக நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை அணையின் மூலம் தண்ணீர் வசதி பெறும் கோதையாறு இடதுகரை கால்வாயில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நெடுகை நீளம் 9,800 மீட்டரில் 35 மீட்டர் மண்சரிவு ஏற்பட்டது. அது தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
மேற்படி தளத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணியாக ரூ.32 இலட்சத்தில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அணை திறப்பதற்கு முன்பாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியினை செருப்பாலூர் உதவி செயற்பொறியாளர் மா.மூர்த்தி ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)
