» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புதுக்கடையில் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி!.
திங்கள் 8, ஏப்ரல் 2024 4:22:00 PM (IST)
புதுக்கடையில் ஆற்றில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், புதுக்கடை அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (53). இவர் கூலித் தொழிலாளி. நேற்று மாலை சிவன் மங்காடு ஆற்றில் குளிக்க சென்றார். படித்துறையில் இறங்கும் நேரத்தில் எதிர்பாராமல் கால் தடுக்கி ஆற்றில் விழுந்தார். ஆனால் அவர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சிவன் மனைவி சுபா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.