» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா

ஞாயிறு 5, மே 2024 7:35:37 PM (IST)



தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகளை வழங்கினார்.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைத்திட வேண்டுமென பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் பகுதி  செயலாளரும் முன்னாள் துணை மேயருமான பி.சேவியர் ஏற்பாட்டிலும் கிருஷ்ணராஜபுரத்தில் வடக்கு பகுதி 5வது வார்டு சார்பில் லிங்கராஜ் ஏற்பாட்டிலும் அமைக்கப்பட்டிருந்த கோடை கால நீர், மோர் பந்தலை  தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, திராட்சை போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ்,   மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், பகுதி கழக செயலாளர்கள் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory